Posts

மூவிடப்பெயர்

Image
1.2 மூவிடப்பெயர்கள்      மொழிகளின் உறவையும் மொழியினங்களின் தொடர்பையும் விளக்கும் வகையில் மூவிடப்பெயர்கள் (Personal pronouns) சிறந்து நிற்கின்றன. பொதுவாக ஒரு மொழியில் சொற்கள் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மூவிடப்பெயர்கள் எவ்வளவு காலமாயினும் பெரும் மாற்றத்திற்கு     உள்ளாவதில்லை.     காலப்போக்கில் மூவிடப்பெயர்களில் சிறுசிறு மாறுதல்கள் ஏற்படுவது உண்டு. ஆயினும் பழைய சொல் வடிவுக்கும் புதிய சொல் வடிவுக்கும் உள்ள உறவு தெளிவாய்த் தெரியும். சான்றாகத் தமிழில், நனிமிகு பழங்காலத்தில் தன்மை ஒருமை இடப்பெயராக ‘யான்’ மட்டுமே வழங்கியது. காலப்போக்கில் ‘நான்’ என்ற புதிய வடிவம் வந்தது. இருப்பினும் இவ்விரு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை குறைவு. இதுபோன்ற சிறு மாறுதல் நிகழ்வதற்குக் கூட நெடுங்காலம் வேண்டியுள்ளது.      மூவிடப்பெயர்கள் தன்மை இடப்பெயர், முன்னிலை இடப்பெ...

ஐந்திலக்கண நூல்கள்!!

Image
ஐந்திலக்கண நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன ஐந்திலக்கண நூல்களாகும். இவற்றுள் தொல்காப்பியத்தை ஐந்திலக்கணம் எனக் கூறுதல் மரபன்று. ஆயினும் ஐந்திலக்கணமும் இதன்கண் உண்டு. வீரசோழியம் பொருளை இரண்டு கூறாகக் கொண்டு இலக்கணமும் புறப்பொருள் இலக்கணமும் உணர்த்துகின்றது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் இவற்றின் இலக்கணமும் கூ றுகின்றது. தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன. சாமிநாதம் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூல் முழுதும் வெளிவரவில்லை. தமிழ் நெறி விளக்கம் என்னும் நூலும் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூலில் அகப்பொருள் பகுதியே கிடைத்துள்ளது. பிற பகுதிகள் கிடைக்கவில்லை. நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்று கூறுவர். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூலும் ஐந்திலக்கணம் உணர்த்துவது என்பர். இனி ஒவ்வோர் இலக்கணப் பிரிவு பற்றியும் காண்போம். எழுத்தும் சொல்லும் தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் ஆய்ந்தார்; பொருளும் ஆய்ந்தார். ஆனால் பின் வந்தோர் எழுத்தும் சொல...

தனித்தமிழ் இயக்கம்

Image
தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும். சமற்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். தனித்தமிழ் இயக்க வளர்ச்சி தமிழ், மிகுந்த சொல்வளம் கொண்டது, எந்தக் கருத்தையும் தன் வளத்தைக் கொண்டே சொல்லக்கூடிய ஆற்றல் இம்மொழிக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவது தனித்தமிழ் . காலந்தோறும் தமிழ், புதுச் சொற்களை ஆக்கிக் கொண்டே வந்துள்ளது. வேர்ச்சொல் வளம் இம்மொழியில் இருக...

நீண்ட இலக்கிய மரபை கொண்ட தமிழ்மொழி

Image
நீண்ட இலக்கிய மரபை கொண்ட தமிழ்மொழி மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி. மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப் பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததால் மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள் மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும், கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக் காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்ப...

உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு

உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு ஆன்மா அல்லது மனம் பற்றிய விஞ்ஞான உணர்வே உளவியல் எனப்படுகிறது தற்காலத்தில் உயிரிகளின் வெளிப்டையான நடத்தைகள் பற்றிய ஆய்வு உளவியல் எனப்படுகிறது உளவியல் என்பது ஆங்கிலத்தில் psychology எனப்படுகிறது இது psyche + logos என்ற கிரேக்க எண்ணக்கருவில் இருந்து தோற்றம் பெற்றது psyche - ஆன்மா அல்லது மனம் எனப்படுகிறது logos - அறிவு அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது எனவே மனம் அல்லது ஆன்மா பற்றிய அறிவு உளவியல் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது உளவியலின் முதல் நூல் அரிஸ்டாட்டில் ஆல் எழுதப்பட்ட De Anima (ஆன்மாவின் இயல்பு என்பதாகும் ) உளவியலின் வரலாறு 1. ஆதி கிரேக்க கால உளவியல் 2. மத்திய கால உளவியல் 3. நவீன கால உளவியல் 4. தற்கால உளவியல் ஆதி கிரேக்க உளவியல் புரொட்டொகிரஸ்   மனிதனே அனைத்தையும் அளந்தறியும் அளவுகோல். சோக்கிரட்டிஸ் - மனித நடத்தை, விலங்கு நடத்தை பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஹிப்போகிரட்டிஸ்  - உளவியல் சார் உடலியல் ஆய்வின் முன்னோடி இவர் உடல் உள தொடர்பு பற்றி ஆய்வு செய்துள்ளார் ஒரு உளவியல் மருத்துவராக விளங்கினார். பிளேட்டோ -...

Hinduculture Book Download Tamil

Image
Download Hindu Culture Book In Tamil   Download